முதலில் எலுமிச்சைபழத்தை பிழிந்து சாறு எடுத்து வைக்கவும் பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை, பெருங்காயம், முந்திரி, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும்.
அதில் எலுமிச்சை கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் அடுப்பின் தணலை குறைத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
தட்டில் சாதத்தை பரத்தி உப்பு, எண்ணெய் சேர்த்து நன்கு ஆற வைக்கவும்.
நன்கு ஆறிய சாதத்தில் ஆறிய கலவையை சேர்த்து கலந்து விடவும். சுவையான எலுமிச்சை சாதம் தயார்
இந்த எலுமிச்சை கரைசலை தண்ணீர் படாமல் மூன்று வாரம் வரை குளிர் சாதன பெட்டியில் வைத்து சாப்பிடலாம். மிதமான தீயில் செய்தால் தான் கருகாமல் வரும்.