1.உருளைக்கிழங்கு,பாசிபயிறை தனிதனியாக வேகவைத்து மசித்து கொள்ளவும்.
2.பின்னர் அதனுடன் நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், சீஸ், கார்ன், கொத்தமல்லி, மிளகாய்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். அதை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
3.கார்ன் ஃப்ளாரில் தண்ணீர் ஊற்றி கரைத்து, அதில் கிழங்கு உருண்டைகளை முக்கி எடுத்து, பின்னர் பிரெட் தூளில் புரட்டவும்.
4.இந்த உருண்டைகளை எண்ணெயில் மிதமான தீயில் பொரிக்கவும்.
5.உருண்டைகள் வெந்து பொன்னிறமானதும் எண்ணெயில் இருந்து எடுக்கவும்.
6.சுவை மிகுந்த பாசிபயிறு சீஸ் பால்ஸ் தயார்.
7.டொமெட்டோ சாஸ் உடன் பரிமாறவும்.