தக்காளி - 1/4 கிலோ (நறுக்கியது)
புளி தண்ணீர் - 1/2 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 /4 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
நறுக்கிய தக்காளியை நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு வெறும் வாணலியில் வெந்தயம் சேர்த்து வறுத்து,மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு செய்து கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம், வெந்தயப்பொடி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பின்னர் அரைத்த தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து தக்காளி விழுது பாதியாகும் வரை வேக விடவும்.
தக்காளி விழுது பாதியாகக் குறைந்த பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், புளி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி சிறுதீயில் வைத்து நன்கு கிளறி இறக்கவும்.