வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும்.
அதே வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
அதனுடன் கறிவேப்பிலை, வேகவைத்த கடலை, உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.
கொத்தமல்லித்தழை தூவி புட்டுடன் பரிமாறவும்.