பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு ஒரு பாத்திரத்தில் உதிர்த்து போடவும்.
ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்
அதே கடாயில் பிரட் துண்டங்களைப் போட்டு வறுக்கவும்.
அத்துடன் வற்றிய பால் ஊற்றி குழைய பிரட்டவும்.
பின்னர் சீனி சேர்த்து கிளறி விட்டு கொண்டே இருக்கவும்
அதில் நெய் சேர்த்து கட்டிவிழாதவாறு தொடர்ந்து கிளறவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் கெட்டியான பதம் வரும் போது முந்திரி, ஏலக்காய்த் தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.