இறாலை நன்கு சுத்தம் செய்த பின் உப்பு , மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி சிவந்த்தும் தக்காளி 🍅 சேர்த்து மசியும் வரை வதக்கவும்.
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி வற்றல்தூள், மல்லிதூள்,சேர்த்து சிறுதீயில் வைக்கவும்.
சிறிதளவு தண்ணீர் சேர்த்து இறாலையும் சேர்த்து 5 நிமிடம் வைக்கவும். கெட்டியாக கரைத்த புளி தண்ணீர் சேர்க்கவும்.
சிறுதீயில் வைத்து இறால் வெந்து எண்ணெய் பிரியவும் கெட்டியான தேங்காய் பால் சேர்து ஒரு கொதி வந்ததும் மல்லிதழை தூவி இறக்கவும்.