மட்டனை சுத்தம் செய்து உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
வறுத்து அரைக்க தேவையான பொருட்களை வறுத்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பிலை தாளித்து சிவக்க வதக்கி இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின்னர் அரைத்த மசாலா , வற்றல்தூள், மல்லிதூள்,உப்பு சேர்த்து சிறுதீயில் வைத்து நன்கு வதக்கி கொள்ளவும்.
பின்னர் தேங்காய் பால், மட்டன் சேர்த்து சிறுதீயில் வைத்து தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி இறக்கவும்.