பன்னீர் மசாலா செய்வதற்கு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் பனீரை துருவிக்கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்
வெங்காயம் வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து கிளறி பனீர் சேர்த்து கிளறவும்
பிறகு தயிர் மல்லி இலை தூவி கிளறி விடவும்
தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் தோசை மாவு எடுத்து தோசை ஊற்றவும் எண்ணெய் ஊற்றி முக்கால் பாகம் வேக விடவும்
பிறகு அதன் செய்து வைத்துள்ள பன்னீர் மசாலாவை வைத்து மீண்டும் மூடி வைத்து சிறிது நேரம் வேகவிடவும்
விரும்பிய வடிவில் கட் செய்து பரிமாறலாம்
சுவையான பன்னீர் மசாலா தோசை ரோல் தயார்