தினமும் காய்ச்சிய பாலில் இருந்து கிடைக்கும் பாலாடையை இரண்டு வாரங்களுக்கு சேமித்து வைக்க வேண்டும்
பாலாடையை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.
அரைத்து கிடைத்த கிரீமை சிறிது நேரம் குளிர வைக்கவும். வெண்ணை திரண்டு வரும்.
மேலும் வெண்ணெய் நன்கு கிடைக்க மத்து கொண்டு கடைந்து எடுக்கவும்
கடைந்து எடுத்த வெண்ணெயை சிறிது தண்ணீரில் மெதுவாக அலசவும்
கட்டியான பாத்திரத்தில் வெண்ணெயை சேர்த்து சூடாக்கவும்
வெண்ணெய் நன்கு உருகியதும் அதில் முருங்கை இலைகளை சேர்க்கவும்
முருங்கை இலைகள் நன்கு வதங்கியதும் நெய்யின் வாசனை வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கவும்
சிறிது நேரம் குளிர வைத்து முருங்கை இலைகளை வடிகட்டினால் நெய் ரெடி
நெய்யை வடிகட்டிய பின் கிடைத்த மொருகளான முருங்கை இலை களை சூடான சாதத்துடன் சாப்பிடலாம்