சின்ன வெங்காயம் மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து எடுக்கவும்.
ஒரு வாணலியில் தனித்தனியாக சீரகம், கொத்தமல்லி விதைகள், காய்ந்த மிளகாய் வற்றலை நன்றாக வறுத்து எடுத்து, சிறிது நேரம் குளிர வைக்கவும்.
பின்பு குளிர்ந்த பின், மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடித்து கொள்ளவும்.
மீனை நன்றாக சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கிளறி வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புளி மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின், கடுகு, வெந்தயம் பொடித்து கருலேப்பில்லை சேர்க்கவும்.
பின்பு நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு பொடித்து வைத்துள்ள மசாலா, மஞ்சள் தூள்,பெருங் காயத்தூள், உப்பு சேர்த்து கிளறி, புளி கரைசலை வடிகட்டி சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, சிறிது தண்ணீர் சேர்த்து லேசாக கொதிக்க விடவும். உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்க்கவும்.
பின்பு மீன் துண்டுகளை சேர்த்து கடாயை மூடி வைத்து மிதமான சூட்டில் வேக விடவும்.
ஒரு பத்து நிமிடத்திற்கு பிறகு மீன் வெந்துள்ளதா என சரி பார்க்கவும்.
மீன் வேகும் வரை மிதமான சூட்டில் குழம்பை கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
மீன் குழம்பு தயார்.