முருங்கை இலை களை நன்றாக கழுவி எடுக்கவும்
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடான பின் சீரகம் பொடித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, துருவிய இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள், பெருங் காயத்தூள் சேர்க்கவும்
பின்பு முருங்கை இலைகளை சேர்த்து கிளறி உப்பு, மிளகு தூள், தண்ணீர் சேர்த்து கிளறி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
விசில் அடங்கியதும் சூடான முருங்கை இலை சூப்பை பரிமாறலாம்