தூதுவளை இலை, சீரகம்,மிளகு, பூண்டு, இஞ்சி,சின்ன வெங்காயம் , தக்காளி அனைத்தையும் சேர்த்து மைய அரைத்து எடுக்கவும்.
ஒரு வாணலியில் சிறிது வெண்ணெய் சேர்த்து சர்க்கரை சேர்த்து கலந்து கிளறி விடவும்.
அரைத்த விழுதை சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
உப்பு தேவையான அளவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும்.
சுவையான இந்த சூப் மழைக்காலத்திற்கு மிகவும் ஏற்றது.
சளியை அகற்றும்.