தினை அரிசி, பச்சரிசி இரண்டையும் நன்றாக கழுவி நல்ல தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
உளுந்து, வெந்தயம் இரண்டையும் நன்றாக கழுவி நல்ல தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
6 மணி நேரம் மாவை புளிக்க வைக்கவும்.
அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும் தோசை வார்த்து லேசாக எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.