கடலைப்பருப்பை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்
உளுத்தம் பருப்பு அரிசி இரண்டையும் 50 நிமிடம் ஊற வைக்கவும்
ஊறிய கடலை பருப்பை குக்கரில் ஏலக்காய் சேர்த்து 2 விசில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
வெல்லத்தைப் பொடி செய்து கம்பி பதம் வரும் வரை காய்ச்சி கொள்ளவும் தேங்காயை துருவிக் கொள்ளவும்
கடலைப் பருப்பை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைத்துக் கொள்ளவும் ஒரு கடாயில் நெய் ஊற்றி தேங்காய் வறுத்து கொள்ளவும் அதில் வேகவைத்த கடலை பருப்பு வெல்லம் சேர்த்து உருண்டை பிடிக்கும் வரும் வரை கிளறிக் கொள்ளவும்
ஊறிய அரிசி உளுந்து இரண்டையும் நைசாக தண்ணீர் இல்லாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும் கடலைப்பருப்பு பூரணத்தை சிறு உருண்டைகளாக உருட்டி அரிசி மாவில் தோய்த்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்