இடியாப்பமாவுடன் கொதிக்க வைத்த தண்ணிர் சேர்த்து உப்பு சேர்த்து பிசைந்து இடியாப்பக்களாக பிழிந்து வேக வைத்துக்கொள்ளவும் .ஒரு கப் மாவுக்கு ஒனனே முக்கால்கப் தண்ணிரின் அளவு
தேங்காயை அரைத்து முதல்பால் தனியாகவும் இரண்டாம் தனியாகவும் எடுத்துக்கொள்ளவும்
இஞ்சி பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்
வெங்காயம் தக்காளி நறுக்கி கொள்ளவும்
அடுப்பில் வானலியை வைத்து எண்ணெய் ஊற்றவும் பின் கடுகு வெந்தயம் சோம்பு கருவேப்பில்லை சேர்க்கவும்.பின் மிளகாய்வத்தல்.பச்சைமிளகாய் சேர்க்கவும்
பின் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
பின் நறுக்கிய இஞ்சி பூண்டு மஞ்சள் தூள் சேரக்கவும்.பின் மீனைசேர்த்து ஐந்துநிமிடம் வேக வைக்கவும்
பின் தேங்காய் இரண்டாம்பால் சேர்த்து பத்து நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைக்கவும்
பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும்
பின் முதல் தேங்காய்பால் சேர்க்கவும்
பின் நறுக்கிய மல்லிச்செடி சேர்க்கவும்.
சுவையான இலங்கை மீன் சொதி & இடியாப்பம் ரெடி