வெங்காயம் தக்காளியை அரைக்கவும், கத்திரிக்காயை நீளவாக்கில் அரியவும்.
ஒரு வாயகன்ற சட்டியில் கத்திரிக்காய், அரைத்த வெங்காயம் மற்றும் தக்காளி , பச்சமிளகாய், உப்பு, மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.
புளியை கரைத்து சேர்த்து கொதிக்கவிடவும். கத்திரிக்காய் வெந்து புளி மசாலா வாசனை அடங்கியதும் கோதுமைமாவை அரை கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்
தனியாக தாளிப்பு சட்டியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்த்து கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.
இதற்கு தொட்டு கொள்ள ஏதாவது பொரியல் (அ) கறி வடை, போன்றவை நன்றாக இருக்கும்.
ரசத்துக்கு பதில் இப்படி கத்திரிக்காய் ரசம் வைத்து சாப்பிடலாம், இதே போல் முருங்கக்காய், வெண்டைக்காயிலும் செய்யலாம்.
இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் பாரம்பரிய ரசம். இதே போல் முருங்கக்காய், வெண்டைக்காயிலும் செய்யலாம்.