மட்டன் நன்கு கழுவி அதில் 1/2 tsp மஞ்சள் தூள் சேர்த்து கழுவவும்.
ஒரு குக்கரில் மட்டன், தண்ணீர் 2 Cup, மஞ்சள் தூள் 1/2 Tsp, மிளகாய் தூள் 2 Tsp, உப்பு, பச்சை மிளகாய் 1 No சேர்த்து விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
பச்சை மிளகாய்,இஞ்சி, பூண்டு, புதினா இலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து அரைக்கவும்.
ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணை மற்றும் நெய் ஊற்றி அனைத்து மசாலா பொருட்களை சேர்த்து பொரிந்த பின் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
அரைத்து வைத்த பச்சை மிளகாய் பேஸ்டை இதனுடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இப்போது வேகவைத்த மட்டனை தண்ணீர் இல்லாமல் சேர்த்து மசாலாவுடன் கலக்கவும்.
பின் 4.5 Cup தண்ணீர் சேர்த்த பிறகு நல்ல கொதி வந்த பின் கழுவிய அரிசி சேர்த்து கிளறி விட்டு மூடி வைக்கவும்.(மட்டன் வேகவைத்த தண்ணீர் சேர்க்கும் போது சுவை அதிகரிக்கும்)
அடுப்பை இதமான சூட்டில் 30 நிமிடம் வைத்து அனைக்கவும்.
சுவையான மட்டன் பிரியாணி தயார். தயிர் பச்சடியுடன் சேர்த்து ருசியுங்கள்.