கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்
பாத்திரத்தில் பாலைக் காய்ச்சிக் கொள்ளவும்
எண்ணெய் சேர்த்து சேமியாவை வறுத்துக் கொள்ளவும் அதில் காய்ச்சிய பால் கேசரி பவுடர் சேர்த்து வேகவிடவும் சேமியா முக்கால் பாகம் வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து மீண்டும் கிளறவும்
பிறகு வறுத்து வைத்துள்ள முந்திரி பாதி நெய் சேர்த்து கிளறவும்
ஒரு தட்டில் நெய் தடவி செய்து வைத்துள்ள சேமியாவை அதில் கொட்டி மீதியுள்ள முந்திரிப்பருப்பு சேர்த்து ஆற வைத்து வில்லைகள் போடவும்
சுவையான சேமியா பால் பர்பி தயார்