கடாயில் நெய்யை (1 டீஸ்பூன்) ஊற்றி சூடான பின் முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் மற்றும் உலர் திராட்சைகளை சேர்க்கவும். லேசாக வறுத்து எடுத்து பின் வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
அதே கடாயில் மீதமுள்ள நெய் ஊற்றி ரவை சேர்த்து நன்கு வறுக்கவும்.
ரவையை நன்கு வறுத்தவுடன், பால் சேர்க்கவும்.
ரவையை பாலில் நன்கு வேக விடவும். மிகவும் கெட்டியாக இருந்தால், கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.
இப்போது சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.
ரவை கட்டிகளாக ஆகாமல் தொடர்ந்து ஃபிர்னீயை கிண்ட வேண்டும்.
ரவை, சர்க்கரை எல்லாம் நன்றாக கலந்து கெட்டியான பின், வறுத்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு, வால்நட் மற்றும் உலர் திராட்சையை சேர்த்து நன்கு கிளறவும்.
மேலும் மில்க்மெய்ட் சேர்த்து 5 நிமிடம் நன்றாக கலக்கவும்.
சூடாக அல்லது குளிர வைத்து ஃபிர்னீயை பரிமாறலாம்.