மட்டன் சுத்தம் செய்து கொள்ளவும்
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் பட்டை ஏலக்காய் போட்டு பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் கறியை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்
அதில் இஞ்சி பூண்டு விழுது தக்காளி உப்பு மஞ்சள் தூள் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறவும் தண்ணீர் ஒரு கொதி வந்ததும் கறியை மூன்று விசில் வேக வைத்துக் கொள்ளவும்
கறி வெந்தவுடன் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் மல்லித்தூள் சேர்த்து கொதிக்க விடவும்
கறியில் பெப்பர் தூள் சீரகத் தூள் கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம்
சாம்பார் சாதம் சப்பாத்தி பரோட்டா நாண் ஆகியவற்றுக்கு சைட் டிஷ் சாப்பிட சுவையாக இருக்கும்