இறால் நன்கு கழுவி சுத்தம் செய்து தனியே வைத்துக்கொள்ளவும்.
ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணை ஊற்றவும். சூடான பின்னர் பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து பொறிந்தவுடன் வெங்காயம் சேர்க்கவும்.
வெங்காயம் பொன்னிறமான பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் தக்காளி சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்த பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
எண்ணை தனியே வெளியேறும் நேரத்தில் இறால் சேர்த்து கிளரவும். 5 நிமிடம் மூடி வேக வைத்த பின் மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
சுவையான இறால் தொக்கு தயார்.
சாதம், இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி உடன் உண்டு மகிழுங்கள்.