இருவகை பயிர்களையும் ஒன்றாக இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்
பின்னர் பருப்பு உடன் சோம்பு , வரமிளகாய் ,உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்
அரைத்த பருப்பை வாழை இலையில் வைத்து நன்கு சுருட்டி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்
வேந்ததும் எடுத்து தனியே வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , வெந்தயம் சேர்த்து நன்கு பொரித்து
பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு , கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
தக்காளி சேர்த்து வதக்கவும்
புளி கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
இடையில். உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு
பின்னர் வேகவைத்த பருப்பு சேர்த்து நன்கு இரண்டு கொதி விடவும்
இப்போது மீனின் சுவையில் இலை சைவ மீன்குழம்பு தயார்
இதன் சுவை அசைவ மீனை போலவே இருக்கும்