ஒரு கடாயை சூடாக்கி அதில் கொள்ளு சேர்க்கவும்
கொள்ளு மனம் வரும் வரை மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும்
பின்பு வறுத்த கொள்ளு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
விசில் அடங்கியதும் கொள்ளு வேக வைத்த தண்ணீரை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி புளி யை 10 நிமிடம் ஊற வைக்கவும்
மிக்ஸி ஜாரில் சீரகம், மிளகு, பூண்டு, தக்காளி, காய்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் சிறிது கருலேப்பில்லை சேர்த்து கர கரவென அரைத்து எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு பொடித்து சிறிது கருலேப்பில்லை சேர்க்கவும்
பின்பு அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பெருங் காயத்தூள் சேர்த்து கிளறி கரைத்து வைத்த புளி கரைசலை வடிகட்டி சேர்க்கவும்.
பின்பு வடிகட்டி வைத்துள்ள கொள்ளு தண்ணீரை சேர்க்கவும்.
ரசம் கொதி வரும் முன் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து கொத்தமல்லி இலை களை தூவி விடவும்.
சுவையான கொள்ளு ரசம் தயார். சூடான சாதத்துடன் பரிமாறலாம்
குறிப்பு: வேக வைத்த கொள்ளை பொறியல் அல்லது கொள்ளு சுண்டல் செய்து பரிமாறலாம்.