கடலைப்பருப்பு - 1/2 கப் - 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
துவரம் பருப்பு-1/4 கப் - 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
பெருஞ்சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
கருவேப்பில்லை - 1/4 கப்
வெங்காயம் - 1 - நன்றாக நறுக்கி கொள்ளவும்
கொத்தமல்லி இலை - சிறிதளவு- 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 - நன்றாக நறுக்கி கொள்ளவும்
உப்பு - தேவைக்கு - 1/2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீ ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொறிப்பதற்கு - 1
Directions
ஊற வைத்த கடலைப் பருப்பு, துவரம் பருப்பை மிக்ஸியில், பெருஞ்சீரகத்துடன் சேர்த்து கர மொரவென அரைக்கவும்.
நறுக்கிய வாழைப்பூ மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஓரிரு நொடிகள் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்
பின்பு அரைத்த விழுதுடன், அனைத்துப் பொருட்களையும்(எண்ணெயைத் தவிர ) ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு கிளறவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு சூடாக்கவும்.
எண்ணெய் சூடான பின்பு, வடை மாவை சிறிது எடுத்து வட்டமாக தட்டி எண்ணெயில் பொன்னிறம் ஆகும் வரை மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்
சுவையான வாழைப்பூ வடை தயார்.
தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
குறிப்பு: வாழைப்பூவின் தோலை உரித்து சிறிய பூக்களை மட்டும் எடுத்து வைக்கவும். சிறிய பூக்களின் உட்புறம் உள்ள நரம்புகளை அகற்றி விடவும். பூக்கள் விரைவில் நிறம் மாறும். அதனால் நறுக்கிய வாழைப்பூக்களை நீர் மோரில் போட்டு வைக்கவும்.