கொதிக்கும் நீரில் எண்ணெய் உப்பு கலந்து சோயா வை அதில் கலக்கவும் . பின் அடுப்பை அணைக்கவும்.
சோயா வை 10நிமிடம் கழித்து குறைந்தது ஐந்து முறை தண்ணிரில் பிழிந்து அலசவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கொஞ்சம் சீரகம் கறவேப்பிலை இட்டு பொரிக்கவும்
வெங்காயம் பொன் நிறம் ஆனதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் கூழ் போல் ஆகும் வரை
பின் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
இன்னொரு வாணலியில் மிளகு சீரகம் சேர்த்து வதக்கவும். நன்கு வாசம் வந்த பிறகு மிக்ஸியில் அரைக்கவும்
மீண்டும் மசாலா வதக்கிய வாணலியில் மசாலா பவுடர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
இப்பொழுது சோயா அதில் சேர்க்கவும்..நன்றாக அதில் தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்
தண்ணீர் வற்றிய பிறகு அதில் தேங்காய் பால் கலக்கவும் . பின் நன்றாக சுக்கா ஆகும் வரை வதக்கவும்
இப்பொழுது அதில் உப்பு மற்றும் பிற சுவைகளை செக் செய்து கொள்ளவும்
கடைசியாக வறுத்த சீரகம் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி எலுமிச்சை தனியா கலந்து சூடாக பரிமாறவும்