தேவையான பொருட்கள்
உளுந்து 1/2 கப்
அரிசி மாவு 1 டீஸ்பூன்
சர்க்கரை 3/4
தண்ணீர் 1/2 கப்
ஏலக்காய் தூள் 1/4 சிட்டிகை
ஆரஞ்சு புட் கலர் 2 சிட்டிகை
எலுமிச்சை சாறு 1/4 ஸ்பூன்
எண்ணெய் 2 கப்
நெய் 1 டேபிள் ஸ்பூன்
பால் பாக்கெட் கவர் 1
Directions
உளுந்தை தண்ணீர் விட்டு 1 மணிநேரம் ஊரவிட்டு அரைக்கவும்.
அரைத்த மாவை சிறிது தண்ணீரில் போட்டால் கரையாமல் அப்படியே உருண்டையாக இருந்தால் சரியான பதம்.
அரைத்த உளுந்து மாவுடன் அரிசி மாவு கலர் சேர்த்து கலந்து பால் கவரில் போட்டு கிளிப் போடவும்.
தவாவில் சர்க்கரை தண்ணீர் விட்டு கரைந்ததும் அதில் ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கி கலர் எலுமிச்சை சாறு சேர்க்கவும். சர்க்கரை பாகு ரெடி.
கடாயில் நெய் எண்ணெய் சேர்த்து சூடானதும் மாவை பிழியவும். இருபுறமும் வேக விட்டு சர்க்கரை பாகில் போட்டு இரண்டு நிமிடம் ஊரவிட்டு எடுக்கவும்.