வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
அதனை இஞ்சி பூண்டு விழுதுடன் சேர்த்து வதக்கவும்.
ஆற வைத்து தக்காளியுடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய், வெண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
பட்டை இலவங்கம் தாளித்து கொள்ளவும்.
அரைத்த விழுதை ஊற்றி கொள்ளவும்.
மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கொள்ளவும்.
பனீரை சேர்க்கவும்.
முந்திரி விழுது, பால் சேர்த்து கொள்ளவும்.
பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொத்தமல்லி தழைகளை தூவி அலங்கரித்து பரிமாறவும்.