பீட்ரூட்டை தோல் சீவி நன்றாக கழுவிக் கொள்ளவும்.
அதை பொடியாக துருவி மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அரைத்த பீட்ரூட்டை வடிகட்டி கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் ரவை, மைதா, சர்க்கரை மூன்றும் எடுத்து கொள்ளவும்.
அதனுடன் நறுக்கிய முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ளவும்.
பீட்ரூட் சாறை சேர்த்து கொள்ளவும்.
தேவையான தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
1 மணி நேரம் ஊற விடவும்.
1 மணி நேரம் கழித்து அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை ஸ்பூனால் எடுத்து ஊற்றி ஒன்றிரண்டாக பொரித்து எடுக்கவும்.
திருப்பி போட்டு மறு புறமும் சிவக்க விடவும்.
இந்த இனிப்பு எண்ணெய் அதிகமாக இழுக்காது.
பீட்ரூட் சேர்த்து செய்து கொடுப்பதால் குழந்தைகளுக்கு சத்தான தின்பண்டம் ஆகும்.