ஒரு கிண்ணத்தில் எல்லா மாவையும் எடுத்து கொள்ளவும்.
அதில் தேவையான உப்பு, தயிர், மிளகாய் தூள், சோம்பு தூள், இஞ்சி பூண்டு விழுது நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி தழை சேர்த்து கொள்ளவும்.
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கையால் நன்றாக கலந்து கொள்ளவும்.
அரை மணி நேரம் புளிக்க விடவும்.
அரை மணி நேரத்திற்கு பிறகு ஊத்தப்ப தவாவை அடுப்பில் வைத்து எல்லா குழிகளிலும் அரை ஸ்பூன் எண்ணெய் விடவும்.
மாவை கரண்டியால் எடுத்து எல்லா குழிகளிலும் விட்டு சிவக்க விடவும்.
மறு பக்கம் திருப்பி போடவும்.
சிவந்தவுடன் தட்டில் எடுத்து வைக்கவும்.
சூடாக சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.