உருளைக்கிழங்குகளை நன்றாக கழுவி நீரை வடித்து வைக்கவும்.
சிப்ஸ் கட்டையில் சன்னமாக சீவி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு அதில் சீவிய உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து கலந்து நன்றாக கழுவி நீரை வடித்து வைக்கவும்.
ஒரு காட்டன் துணியை விரித்து வைத்து அதில் சீவிய உருளைக்கிழங்கு துண்டுகளை பரப்பி 10 நிமிடங்கள் உலர விடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் சீவிய உருளைக்கிழங்கு சிப்ஸ் களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
உப்பு, மிளகாய் தூள் கலந்து கொள்ளவும்.
சிப்ஸ் சூடாக இருக்கும் போது கலந்து வைத்த உப்பு தூவி நன்றாக கலந்து கொள்ளவும்.