ஒரு குக்கரில் நன்கு கழுவிய துவரம் பருப்பு இரண்டு மடங்கு தண்ணீர், மஞ்சள் தூள், பூண்டு, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு விசில் கொடுத்து இறக்கவும்.
குக்கரை திறந்தவுடன் மத்து கொண்டு நன்கு மசித்து விடவும்.
அதனுடன் சிறிதாக நறுக்கிய கீரை, சாம்பார் பொடி சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து நிறுத்தவும்.
ஒரு சின்ன கடாயில் நெய் ஊற்றி சிவப்பு மிளகாய், உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் மற்றும் கருவேப்பிலை போட்டு தாளித்து கீரையில் கொட்டவும்.
ருசியான பருப்பு கீரை தயார்.