அரிசி மாவை லேசாக வறுத்து எடுக்கவும்.
அதனுடன் உளுந்து மாவு, வெண்ணெய், எள், மிளகு அனைத்தும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
சிறிது நீரில் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
உப்பு நீரை மாவில் சிறிது சிறிதாக தெளித்து பிசிறி விட்டு மாவை முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
மாவை சிறு சிறு உருண்டைகளாக லேசாக அழுத்தாமல் உருட்டி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் உருட்டி வைத்துள்ள சீடைகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.