ஒரு பாத்திரத்தில் எண்ணை ஊற்றி காய்ந்தவுடன் சிறியதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், பொன்னிறமானவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி தக்காளியை சேர்க்க வேண்டும்.
பின்பு மஞ்சள், மிளகாய், மல்லி,சீரகம் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து கலக்கவும்.
இத்துடன் சிறிய துண்டுகளாக நறுக்கிய காடையை சேர்த்து நன்கு மசாலாவுடன் சேர்க்கவும்.
ஒரு டம்பிளர் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
காடை வேகும் நேரத்தில் தேங்காய், சோம்பு மற்றும் பச்சை மிளகாயை நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
காடை வெந்தவுடன் அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
இத்துடன் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கி வைக்கவும்.
ருசியான காடை மசாலா தயார்.