முதலில் அகர் அகரை தண்ணீரில் 15-20 நிமிடம் ஊற வைக்கவும்.
வாணலியில் பாலை சக்கரை சேர்த்து நன்கு காய்ச்சவும்.பின்னர் அதனை ஆற விட்டு தனியாக வைக்கவும்
நுங்கினை தோல் உரித்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்
இப்போது ஊற வைத்த அகர் அகரினை தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். நன்கு அது கரைந்த உடன் அடுப்பை அணைத்து விடவும்
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் நுங்கினை ஊற்றவும்.அதற்கு மேல் அகர் அகர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
இதனை பிரிசரில் 20 நிமிடம் வைத்து எடுத்தால் சுவையான நுங்கு புட்டிங் தயார்