அரிசி மாவில் சிறிது உப்பு சேர்த்து கிளறவும்.சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு கொண்டு வரவும். பின்னர் அதனை சிறிய உருண்டைகளாக உருட்டி தனியாக வைக்கவும். வாணலியில் தண்ணீர் மற்றும் பால் ,சக்கரை சேர்த்து கொதிக்க விடவும்.கொதித்த பின் உருண்டைகளை போட வேண்டும்.15நிமிடம் பின்னர் ஏலக்காய் சேர்த்து கொள்ளவும்.10 நிமிடம் கழித்து தேங்காய் பால் மற்றும் துருவிய தேங்காய் துருவல் சேர்த்து 10 நிமிடம் கொதித்த பின் கெட்டி பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும். சுவையான பால் கொழுக்கட்டை தயார்