கடாயில் எண்ணெய் ஊற்றி பன்னீர் துண்டுகளை லேசாக வறுத்து எடுக்கவும்
முந்திரி பருப்பினை தண்ணீரில் நன்கு ஊற வைத்து நைசாக அரைக்கவும்
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காய விழுதினை சேர்த்து தாளித்து 10 நிமிடம் கழித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்
5 நிமிடம் கழித்து தக்காளி விழுது ,கேப்சிகம் சேர்த்து மிளகாய் தூள்,மிளகாய்,உப்பு,மல்லி தூள் சேர்த்து கிளறவும்.10 நிமிடம் கழித்து முந்திரி விழுது சேர்த்து கிளறவும்
இப்போது சக்கரை,சோம்பு தூள் சேர்த்து வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து 10 நிமிடம் மூடி வைக்கவும்
கரம் மசாலா சேர்த்து 5-10 நிமிடம் சமைத்தால் சுவையான பன்னீர் கிரேவி தயார்