அரிசியை நன்கு கழுவி 15 நிமிடம் ஊர வைத்து எடுத்துக்கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாயை சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு குக்கரில் எண்ணை ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்க்கவும், பொறிந்தவுடன் அரைத்து வைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்க்கவும். பின்பு மஞ்சள் தூள், பிரியாணி மசாலா மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கிய பின் புதினா, கொத்தமல்லி இலை மற்றும் இறால் சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் அரிசியை சேர்த்து நன்கு கிளறிய பின் தேங்காய் பால் சேர்க்க வேண்டும்.
கொதிக்க ஆரம்பிக்கும் முன் நெய் சேர்த்து குக்கரை மூடி 1 விசில் வந்தவுடன் அடுப்பை அனைக்கவும்.
சுவையான இறால் பிரியாணி தயார்.