வெள்ளரி விதையை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய வெள்ளரி விதை, சர்க்கரை , சிறிது பால் அனைத்தையும் மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 5 கப் பாலுடன் அரைத்த விழுதை சேர்த்து கலந்து கொள்ளவும். பின் இந்த கலவையை அடுப்பில் வைத்து நடுத்தர வெப்பதில் 25 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பாயசம் பதம் வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
அலங்காரமாக பாதாம் முந்திரி பருப்பை சிறிய துண்டுகளாக நறுக்கி மேலே தூவி கொள்ளலாம்.
வெள்ளரி விதையானது சிறுநீர் குழாய் அடைப்பை சரி செய்யும் குணம் கொண்டது. எனவே இதை பாயாசமாக செய்து தர குழந்தைகள், பெரியவர்கள் பிரியமுடன் சாப்பிடுவார்கள். வெள்ளரி மருத்துவ குணமும் கிடைக்கும்.
#குழந்தைகளுக்கான_உணவு_போட்டி