ஒரு பாத்திரத்தில் மாவு, உப்பு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், தயிர் தேவையான அளவு சேர்த்து சாப்டான சப்பாத்தி மாவு பதத்திற்கு பினைந்து கொள்ளவும்.
பின் எண்ணெய் சேர்த்து பினைந்து 30 நிமிடம் பாத்திரத்தை மூடி வைக்கவும்.
ஓவனை 10 நிமிடம் சூடு செய்யவும்.
பின்னர் மாவை இரண்டு உருண்டையாக பிரித்து மாவு தொட்டு சப்பாத்தியாக தேய்த்து கொள்ளவும்.
பின்னர் ஓவனில் 150° இல் 15 நிமிடம் பேக் செய்யவும்.
பின் நன்றாக ஆரவைக்கவும்.
விப்பிங் கிரீமை பீட் செய்து கொள்ளவும்.
பின்னர் பீட்சா பேஸ் முழுவதும் ஜாம் தடவி கொள்ளவும். பின் அதன் மேல் பீட் செய்து வைத்த கிரீமை தடவவும்.
பின் நருக்கி வைத்த பழங்கள், முந்திரி,பாதாம், ஸ்ட்ராபெரி, உலர்ந்த திராட்சையை சேர்க்கவும்.
பின் அதன் மேல் சிறிது சாக்கோ சிப், குங்குமப்பூ தூவி பரிமாறவும்.