முதலில் புள்ளியை ஊறவைத்துக் கொள்ளவும்
தேங்காய் துருவலை நைசாக அரைத்துக்கொள்ளவும்.
இதனுடன் மிளகு, பச்சை மிளகாய், சீரகம், தக்காளி, கருவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து ஒரு சுத்து மிக்ஸியில் அறைய விடவும். தேங்காய் தவிர மற்றவை ஒன்றுக்கு இரண்டாக அரைபட்டால் போதும்
இப்போது புளியை கரைத்துக்கொள்ளவும்.
கரைத்த புளியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்க்கவும்.
இதனுடன் குழம்பு தூள், மஞ்சள் தூள், உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்துக் கலந்து, சுவை பார்க்கவும்.
தேவைப்பட்டால் உப்பு காரம் சேர்த்துக்கொள்ளவும். மொத்தத்தில் 3 கப் அளவில் குழம்பு இருக்க வேண்டும்.
ஒரு மண் சட்டி அல்லது வாணலியில் 2 மே. க. நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி அதில் கருவடகம் போட்டு தாளிக்கவும்.
ஒரு மண் சட்டி அல்லது வாணலியில் 2 மே. க. நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி அதில் கருவடகம் போட்டு தாளிக்கவும்.
இப்போது நண்டை சுத்தம் செய்யவும், நண்டின் ஓட்டை எடுத்துச் சுத்தம் செய்த பின் அதிக நேரம் வெளியே இருத்தல் கூடாது. உடனே குழம்பில் போட வேண்டும். 750 கிராம்க்கு 4 நண்டுகள் கொண்ட அளவுக்கு 2-3 நிமிடங்களில் சுத்தம் செய்து விடலாம்.
சுத்தம் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொண்டால் குழம்பை சிறிய தீயில் வைக்கவும்.
இப்போது சுத்தம் செய்த நண்டுகளைக் குழம்பில் சேர்த்து மூடி போட்டு 7 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வேகவிடவும்
வெந்தவுடன், 1/2 மே.க. நல்லெண்ணெய் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.