1) கம்பு மற்றும் கடலை மாவுகளை தனி தனியாக வருத்து எடுக்கவும். 2) ஒரு வானலியில் நெய் மற்றும் எண்ணெய்யை சூடாக்கி வைத்து கொள்ளவும். 3) மற்றொரு வானலியில் சர்க்கரை மற்றும் தண்ணீர் ஊற்றி, ஒரு கம்பி பதம் வரும் வரை, பாகு காய்ச்சவும். 4) சர்க்கரை பாகில் ரோஜா எஸ்ஸென்ஸ் மற்றும் கேசரி பொடியை கலக்கவும். 5) கம்பு மற்றும் கடலை மாவுகளை பாகில் சேர்த்து நன்கு கிளறவும். சூடான நெய் மற்றும் எண்ணெய்யை சிறிது அளவில் விட்டு கொண்டே கிளறவும் ; வானலியை விட்டு அக்கலவை பிரிந்து வரும் வரை கிளறவும். 6) கலவையை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, சமன் செய்யவும். சூடு ஆரியப்பின் சிறு சிறு துண்டுகள் போடவும்.