அடிகனமான பாத்திரத்தில் சீனியை சேர்த்து அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
அதை கொதிக்க வைத்து கம்பி பதம் வந்ததும் கடலைமாவை சேர்த்து கட்டி விழாமல் கிளறவும்.
இடையிடையே நெய் சேர்த்து கிளறி விட வேண்டும்.
நெய் கக்கி பொங்கி வரும் பொழுது சோடா உப்பு சேர்த்து கிளறி விடவும்.
மைசூர் பாகு பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் ஊற்றி பரப்பி விடவும்.
அப்பொழுது தான் மைசூர் பாகில் சந்து விழாமல் இருக்கும்.
பிறகு வில்லைகளாக அறுத்து எடுக்கவும்.
சுவையான நெய் மைசூர் பாகு ரெடி.