அடுப்பில் பாத்திரம் வைத்து நல்லெண்ணெய் சிறிது ஊற்றவும்.
எண்ணெய் காய்ந்ததும் கடுகு ,சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய், பச்சை மிளகாய்,பெருங்காயம் சேர்க்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
சிறிது உப்பு, சாம்பார் தூள் சேர்த்து கிளறி விடவும்.
பிறகு வேகவைத்த தட்டப்பயிர் சேர்த்து கிளறி விட்டு அரிசிக்கு ஏற்றவாறு தண்ணீர் ஊற்றவும்.
பிறகு தண்ணீர் கொதித்ததும் அரிசி சேர்த்து உப்பு அளவு பார்த்து போட்டு குக்கரை மூடி விசில் விடவும்.
சாதம் வெந்ததும் கிளறி விட்டு எடுத்து பரிமாறவும்.
சூடான சுவையான தட்டப்பயிர் சாதம் ரெடி!!!