அரிசியை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊர வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணை ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு சேர்க்கவும்.
பின்பு பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதனுடன் தக்காளி சேர்க்கவும், நன்கு வதங்கியவுடன் அனைத்து மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும். பின் காய்கறிகளை வதக்கிய பிறகு தயிர், புதினா மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து சிறிது நேரம் மூடி வைக்கவும்
அதன்பின் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதித்த பிறகு அரிசியை சேர்த்து நன்கு கலந்த பின் எலுமிச்சை சாறு ஊற்றி மிதமான சூட்டில் 20 நிமிடம் மூடி வைக்கவும்.
தயிர் பச்சடியுடன் சுவையான வெஜிடபிள் பிரியாணி தயார்.