ராகி மாவை 500மிலி தண்ணீர் விட்டு கரைத்து மூடி வைக்கவும்.
5 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
5 மணி நேரத்திற்கு பிறகு 1 லிட்டர் தண்ணீரை ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்த பிறகு வெந்த சாதத்தை அதில் போடவும்.
அது கொதிக்கும் போது கரைத்து வைத்த கேழ்வரகு மாவை ஒரு கையால் ஊற்றி கொண்டு இன்னொரு கையால் விடாமல் கிளறவும்.
5 நிமிடம் விடாமல் கிளறவும்.
பிறகு இன்னும் 20 நிமிடங்கள் அடுப்பிலேயே வைத்து அவ்வப்போது கிளறவும்.
20 நிமிடங்கள் வெந்த பிறகு இறக்கி வைக்கவும்.
2 மணி நேரம் நன்றாக ஆற வைத்து விடவும்.
தேவையான அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு நறுக்கிய வெங்காயம், தயிர், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கையால் கரைத்து ஒரு டம்ளரில் ஊற்றி அருந்தவும்.
மொச்சை கார குழம்பு சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
வெயிலுக்கு ஏற்ற பானம்.