ராகியை நன்கு கழுவி இரவு முழுவதும் ஊற வைக்கவும்
மறுநாள் காலை நீர் வடித்து காடா துணியில் வைத்து கட்டி ஒரு மூடியுள்ள பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.
அடுத்த நாள் காலை நன்கு முளை விட்டிருக்கும். அதை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து பாலை மட்டும் வடிகட்டிக் கொள்ளவும்
இதை அடுப்பில் வைத்து காய்ச்சி கொள்ளவும்.
நன்கு ஆறிய பின் தயிர் ,உப்பு,தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கடைந்து கொள்ளவும்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் ,பச்சை மிளகாய் சேர்த்து கலக்கவும்.
கடுகு, கறிவேப்பிலை தாளித்துசேர்க்கவும்.
ஊறுகாய், உப்பு மாங்காய், கருவாட்டு தொக்கு போன்றவற்றுடன் பரிமாறவும்.
உப்பு , தயிர் சேர்க்காமல் பால்,சர்க்கரை சேர்த்தும்செய்யலாம்