கொண்டை கடலையை 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.
6 மணி நேரம் கழித்து தண்ணீரை வடிகட்டி கடலையை மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.
அரைக்கும் போதே பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் மாவை சிறு சிறு அடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.
சூடாக பரிமாறவும்.